தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக செயல்பட்டு வந்த சங்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராதா பரசுராமன் மறைவை யொட்டி காலியாக இருந்த கூட்டமைப்பு தலைவர் பதவிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் குருவிகுளம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைப்பெற்றது .

கூட்டத்தில் கூட்டமைப்பின் புதிய தலைவராக அழகாபுரி ஊராட்சி மன்ற தலைவர் கே வி கணேசன் ஒரு மனதாக கூட்டத்தின் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

மேலும் கூட்டமைப்பு செயலாளராக சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யலுசாமி,கூட்டமைப்பின் பொருளாளராக அ,கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர்
ஜெ . கனகலட்சுமி , கூட்டமைப்பின் துணைத் தலைவராக களப்பாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் கூட்டமைப்பின் துணைச் செயலாளராக அத்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்கனி மாரியப்பன் கூட்டமைப்பின் கௌரவத் தலைவராக பழங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன்,
காரிச்சாத்தான் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி கூட்டமைப்பின் ஒருங்கிணை ப்பாளராக நக்கலமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குணசேகர் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்

.முன்னதாக மறைந்த ஊராட்சி மன்ற தலைவர் சங்கு பட்டி ராதா பரசுராமன் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *