சர்வதேச குழந்தைகள் தினம் முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் நண்பர் குழு மற்றும் சேந்தமங்கலம் அரிமா சங்கம், சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்அரிமா சங்கத் தலைவர் விமல் முன்னிலை வகித்தார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஜெயந்தி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நிலவேம்பு கசாயம் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் கிருஷ்ணகுமார் வழங்கினார்
மேலும் இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் மல்லிகா, தலைமையாசிரியர் சுமதி, டாக்டர் பாலாஜி வரதராஜ், குழு நிர்வாகிகள் ராஜா, சரவணன், சின்ராஜ், ஜீவா,மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.