பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம்
அய்யம்பேட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் திருக்கல்யாணம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு அய்யம்பேட்டை கிருஷ்ணன் கோவில் வழியாக பெண்கள் சீர்வரிசை தட்டு எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்

தொடர்ந்து சிவாச்சாரர்கள் மந்திரங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *