பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ஆப்தீன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் ….
கண் மருத்துவர்கள் பங்கேற்பு …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஆப்தின் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் பாபநாசம் நோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் பள்ளி குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் காஜா முகையதீன், இயக்குனர் சித்தார்த்தன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி சிவகுமார், உதவி தலைமை ஆசிரியர் தாஹிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக கும்பகோணம் ரோட்டரி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி மற்றும் பாபநாசம் ரோட்டில் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் மற்றும் முன்னாள் , இன்னாள் ரோட்டரி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மகாத்மா கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் கரிஷ்மா மற்றும் மருத்துவக் குழுவினர் 50 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
ரோட்டரி சங்க செயலாளர் முருகவேல்
நன்றி கூறினார்.