பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தின் முளைப்பாரி திருவிழா..

200-க்கும் மேற்பட்ட பெண்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, முளைப்பாரிகளை தலைகளில் சுமந்தவாரு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இடையிருப்பு நெடுஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயத்தின் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. அதனையொட்டி திருக்கருக்காவூர் வெட்டாறு ஆற்றங்கரையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தலைகளில் சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஏற்பாடுகளை நெடுஞ்சேரியை சேர்ந்த கிராமவாசிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *