பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்

பாபநாசம் பகுதிகளில் மின் மோட்டாருக்கு தமிழக அரசு இலவச மின் இணைப்பு வழங்காததால் விவசாயிகள் அதிருப்தி விரைவில் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி தொடங்கியுள்ளனர் மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு நீர் கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடி தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சிலருக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கிவிட்டு மீதமுள்ள விவசாயிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தற்போது பணம் செலுத்தி மின் இணைப்பு பெரும் விவசாயிகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பம் அளித்த விவசாயிகள் ஆழ்குழாய் அமைத்து மின் மோட்டார் தயார் நிலையில் இருந்தும் சென்னையிலிருந்து உத்தரவு வரவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் இணைப்பு வழங்க மறுத்து வருகின்றனர் இதனால் சம்பா சாகுபடிக்கு டீசல் இன்ஜினை வைத்து நீர் பாய்ச்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது இதனால் செலவு இரு மடங்கு ஆவதுடன் நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது இதனை கருத்தில் கொண்டு வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலவச மின் இணைப்பை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி: சீனிவாசன் – முன்னோடி விவசாயி கணபதி அக்கரகாரம்

பேட்டி:ராமானுஜம்
விவசாயி மணலூர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *