சிவம்பட்டியில் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மகா கும்பாபிஷேக திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே சிவம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது இதில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் தாய் வீடான ஈச்சங்காடு கிராமத்தில் இருந்து நேற்று தாய் விட்டு சீதனமாக 31 தட்டு சீர்வரிசைகளை ஊர் மூப்பர் ரமணன் தலைமையில் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து கிராமத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என அனைவரும் உற்சாகத்துடன் நடனமாடி தட்டு வரிசைகளை எடுத்துச் சென்று கோயில் உள்ள ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கருவறையில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்
இதில் துணை மூப்பர்கள் பெருமாள், ரஜினி, ராமு, மூர்த்தி, தர்மகத்தா செந்தில், துணை தர்மகர்த்தார்கள் காசிநாதன், மாது, பில்லா, ஞானவேல், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்