வால்பாறையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர்கள் கைது காவல் துறையினரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் உத்தரவிற்கிணங்க துணைக்கண்காணிப்பாளர் ஸ்ரீ நிதி ஆலோசனையின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் துணை ஆய்வாளர் முருகநாதன் ஆகியோர் தலைமையில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது

இந்நிலையில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு நல்லகாத்து எஸ்டேட்டை சேர்ந்த கோபி வயது 36 என்பவரிடம் விசாரணை செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை கைப்பற்றி மேலும் விசாரணை செய்து அதனடிப்படையில் பெருந்துறைக்கு சென்ற வால்பாறை காவல் துறையினரின் தனிப்பிரிவு மணிகண்டன் மற்றும் தனிப்படை காவல் துறையை சேர்ந்த சேவியர், கார்த்தி ஆகியோர் அடங்கிய காவல் துறையினர் கொண்ட குழு பெருந்துறையில் இருந்த முப்புடாதி என்ற பாலசுப்பிரமணியம் வயது 26, கார்த்தி வயது 22, பிரேம் வயது 24 ஆகியோரிடம் விசாரணை மேற்க் கொண்டு அவர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டபோது பெருந்துறையில் பணிபுரிந்து வரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாண்ட டேன்டா வயது 32 என்பவரின் வீட்டில் சுமார் ஒரு கிலோ கஞ்சாவை கைப்பற்றி வால்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மொத்தம் ஐந்து பேர்களிடமிருந்து சுமார் நான்கு கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர் மேலும் இச்சம்பவத்தில் வால்பாறையிலுள்ள நல்லகாத்து எஸ்டேட்டை சேர்ந்த நான்கு நபர்கள் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் எனவே காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியதாக இருந்தாலும் வால்பாறை பகுதியில் காவல் துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்து கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *