நெட்டூரில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் பாரட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா;-

தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட நெட்டூரில் மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் 35 கிராமப் புற பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு
தையல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்ச்சி பெற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைப்பெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு

தையல் பயிற்சி முடித்த பெண்கள் அனைவருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீராணம் கிளை மூலம் வழங்கப்படும தையல் இயந்திரங்களையும் மற்றும் பாரட்டு சான்றிதழ்களை திரு கரங்களால் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், நெட்டூர் ஊராட்சிதலைவர் ராஜேஸ்வரி
தென்காசி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் ராஜேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீராணம் கிளை மேலாளர் ராகேஷ், தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ் குமார், நெட்டூர் துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன், ஊராட்சி செயலர் ஆறுமுகப்பாண்டியன்,முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் சங்கர், கிளைகழக நிர்வாகிகள், கணேசன், பழனி, முத்தையா, மற்றும் கிராம பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *