கோவை ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி சார்பாக,உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமூகங்கள் வழிநடத்தட்டும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..-

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி சார்பாக, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் இடையே எச்-ஐ-வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி,நடைபெற்றது..

இந்த வருடத்தின் கருப்பொருளான சமூகங்கள் வழிநடத்தட்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணியை மதுக்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். சந்திரகலாராணி மற்றும் ஸ்ரீ அபிராமி கல்லூரி குழுமத்தின் தலைவர் டாக்டர். பெரியசாமி அவர்களும் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.இதில் சுந்தராபுரம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் நடேசன் கௌரவ அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இப்பேரணியில் ஸ்ரீ அபிராமி கல்லூரி குழுமத்தின் இயக்குநர்கள் மருத்துவர்கள். குந்தவி தேவி, செந்தில் குமார்,. பாலமுருகன்,. உமா தேவி,,. சுஜரிதா,ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, எய்ட்ஸ் நோயாளியை அரவணைப்பதில் தனி மனிதனின் பங்கு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ அபிராமி மருத்துவமனையில் இருந்து தொடங்கிய பேரணியில்,செவிலியர் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் கைகோர்ப்போம், கைகோர்ப்போம் எய்ட்ஸ் நோயை ஒழிக்க கைகோர்ப்போம், சபதமேற்போம் சபதமேற்போம் எய்ட்ஸ் இல்லா சமுதாயம் படைப்போம்! வருமுன் காப்போம் நோய் இல்லா உலகம் படைப்போம் போன்ற வாசகங்கள் முழங்கிய படி சென்றனர்..

எச்-ஐ-வி சிகிச்சை, பரிசோதனை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக அபிராமி மருத்துவ குழுமங்களின் தலைவர் மருத்துவர் பெரியசாமி தெரிவித்தார்…இந்நிகழ்ச்சியில்,ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ரேணாகா, துணை முதல்வர் காந்திமதி மற்றும் துணைபேராசிரியர் சிந்தியா, உட்பட,ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *