திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டம் வாகைக்குளம் ஊராட்சி மற்றும் கட்டாரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் சிற்றாறு பகுதிகளில் எந்த விதமான அரசு அனுமதிகள் இல்லாமல் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் அதிக அளவில் மின் அழுத்தம் உள்ள மின் வயர்களை இரும்பு மின் கம்பங்களை நிறுவி வருவதை தடுக்க கோரி பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்காதை கண்டித்துமக்கள் தேசம் கட்சி சார்பில் மானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கட்சியின் தலைவர் உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் ஆசைத்தம்பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்கள்.