எஸ்.செல்வகுமார் சீர்காழி செய்தியாளர்.
சீர்காழியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து நடுநிலைப் பள்ளியில் மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் ஆகிய சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் சீர்காழி நகர செயலாளர் சுரேஷ் குமார், மாவட்ட செயலாளர் நிகழ்ச்சியில் நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அருண் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினராக பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு மாற்று திறனாளி தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் Aps பாஸ்கரன், தலைமையாசிரியர் பாலமுருகன், சிலம்பாட்ட பயிற்சியாளர் தினேஷ், மாற்றுத்திறனாளி சங்க நகர தலைவர் முருகன், துணைத்தலைவர் சங்கர், துணைச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு மருத்துவமனை இரத்த பரிசோதனை ஆய்வாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.