அலங்காநல்லூரில் கொடை அறக்கட்டளை சார்பாக மாபெரும் ரத்ததான முகாம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் கொடை அறக்கட்டளை பாரத் மக்கள் நல இயக்கம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கொடை அறக்கட்டளையின் மேனேஜிங் டஸ்ட் தலைவர் எஸ்.டி.எம். செந்தில்குமார், தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் கொடை அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் ராஜக்கல்பட்டி டாக்டர் ஏ.வி. பார்த்திபன், இடையபட்டி சௌந்தரபாண்டியன், மற்றும் முகாம் நிர்வாகிகள் பெருமாள்ராஜாமணி, பரத்வெங்கடேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.