புதுச்சேரி அரசின், குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கல்வீடு கட்ட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைத் தொகை பெறுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு 180 பயனாளிகளுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான பணி ஆணையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில்குமார், ஆய்வாளர் இளங்கோ மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர் ஜெகன் மோகன், பொருளாளர் கந்தசாமி, ராஜி, சபரிநாதன், தங்கராசு, வேதாச்சலம், சுப்பிரமணி, ஏழுமலை, ரமேஷ், செல்வநாயகம், திலகர், சிராஜ், ஹாலிது, முத்து, ராமஜெயம், கோவிந்தன், சிவசங்கரன், பூவரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *