காரை உயிர்த்துளி இலவச இரத்த தான சேவை மையம் மற்றும் புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாம் நடத்தினர்.
நிகழ்ச்சியில் காரை உயிர்த்துளி அமைப்பின் EXCUTIVE TRUSTEE மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமுருகன் , அமைப்பின் ஆலோசகர் சிவக்குமார் , மருத்துவ முதன்மை அதிகாரி கண்ணகி, மதர் தெரசா நர்சிங் கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜெயபாரதி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அருள் மற்றும் பக்கிரிசாமி ஆகியோர் இணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.இம்முகாமில் எண்ணற்ற தன்னார்வலர்கள் இணைத்து இரத்த தானம் செய்தனர்.