சீர்காழியில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா வழங்கும் முகாம்- 538 பயனாளிகளுக்கு மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினர்

இதில் நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட538 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்.

இதன் மூலம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட வானகிரி சேர்ந்த 238, செம்மங்குடி 21, நாங்கூர் 63, ஆரப்பள்ளம் 152, கோபால சமுத்திரம் 11, எடக்குடி வடபாதி 3, வேட்டங்குடி 10, தரங்கம்பாடி வட்டம் 40 பேர் என மொத்தம் 538 பேர் பலன் அடைந்தனர்.இதன் மதிப்பு 2,52.50.000.ரூபாய் ஆகும்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சமூக நலத்துறை தனித்துணை ஆட்சியர் கண்மணி, சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *