செய்தியாளர். ச. முருகவேல்.
நெட்டப்பாக்கம்
புதுவை நெட்டப்பாக்கம் அருகே சின்ன கரையாம்புத்தூரில் மனிதநேய மக்கள் மன்றம் மற்றும் பசுமை பாரதம் உழவர் நலசங்கம் புதியதாக ஆரம்பிக்கபட்டு அதன் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.மன்ற தலைவர் சமூக சேவகர் பழனிவேல் தலைமைதாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக வில்லியனூர் ஐயப்ப சேவா சமாஜ் சங்க தலைவர் மற்றும் சமூக சேவகர்சேவா ரத்தனா டாக்டர். சுப்பராயன், சமூக சேவகியும் நெட்டப்பாக்கம் முன்னால் சேர்மேன் கீதா ஆகியோர் பங்குபெற்றனர்.
கரிக்கலாம்பாக்கம் இயற்கை விவசாயியும் புதுவை மகளிர் விவசாயவிலை பொருள் உற்பத்தியாளர் சங்க இயக்குனர் பாக்கியவதி புதுவை L.I.C முகவர் ராங்கநாதன் முன்னிலை வகித்தனர்.பின்னர் குத்து விளக்கேற்றி மன்ற பெயர் பலகையை அனைவரும் சேர்ந்து திறந்து வைத்தனர்.
இதில் மன்ற நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் முதியோர் சுய உதவி குழுக்களுக்கு மன்ற சார்பாக இலவசமாக குடைகள் வழங்கப்பட்டது.
சர்க்கரை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா முடிவில் சமூக சேவகர், சேவா ரத்னா, டாக்டர்.கோ.ப. அருள்நிதி ஜெகதீசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.