சத்தியமங்கலம் அருகே அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக் கோயிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.பக்தர்கள் வசதிக்காக. கோயில் வளாகத்தில் மொத்தம் 19 இடங்களில் உண்டியல்கள் வைக்கப் பட்டுள்ளது.
பக்தர்கள் செலுத்தும் அனைத்து உண்டியல்களும் திறந்து, எண்ணப்பட்டு வருகின்றன. இம்மாதத்திற்கான உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று பண்ணாரி கோயில் துணை ஆணையர் மேனகா தலைமையில் நடைபெற்றது. இதில் ரொக்கம் ரூ.97,77,982, தங்கம் 366 கிராம், வெள்ளி 798 கிராம் இருந்தது.
இதில் பவானிசங்கமேஸ்வரர் கோயில் உதவிஆணையர்/ செயல் அலுவலர் சுவாமிநாதன், சத்தி இன்ஸ்பெக்டர் சிவமணி, கண்காணிப்பாளர் பாலசுந்தரி, கோயில் அறங்காவலர்கள், பல்வேறு சேவை அமைப்பினர், கோயில் மற்றும் வங்கி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.