மதுரை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் வளர்ச்சி பணிகள் ஆய்வு…
மதுரை ரயில் நிலையத்தில் ரூ 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு செய்தார்.
மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய முனைய கட்டிடம், பல்லடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம், உப மின் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தையும் ரயில் நிலையத்தை யும் இணைக்கும் சுரங்கப்பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேற்கு நுழைவாயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்து மிடம், ரயில் பாதை களுக்கு மேற்புறம் கட்டப்பட இருக்கும் பயணிகள் வசதி மையத்திற்கான அடித்தளம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
பார்சல் போக்குவரத் திற்காக கட்டப்படும் மேம்பாலம், நடை மேம்பால புனரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கூடுதல் பொது மேலாளருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, கட்டுமானப் பிரிவு முதுநிலைப் பொறியாளர் நந்தகோபால் முதுநிலைக்கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.