வலங்கைமானில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழ், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்தை வைத்து 76-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே. சங்கர் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், நகரச் செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய. இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர்எஸ். ஜெயபால், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி, ஆர்.ஜி.பாலா, தொழுவூர் முனுசாமி, நகர அவைத் தலைவர் ரத்தினகுமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானமும் நடைபெற்றது.