அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கிளை கழக செயலாளர்கள் முத்துராம், சந்திரன், அலங்கை எம்ஜிஆர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பலராமன், மற்றும் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, கிளை தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முருகன், நிர்வாகிகள் நடராஜன் ஆறுமுகம், பக்கீர்முகமது, பாலு குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *