சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பரிசலில் பவானி ஆற்றை கடந்த சென்றது

சத்தியமங்கலம் மார்ச் 16
சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் சப்பரம் 13 மற்றும் 14 தேதிகளில் பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா வந்தது

நேற்று 15 ஆம் தேதி அதிகாலை முதல் 10 மணி வரை தொட்டம்பாளையம் முக்கிய வீதியில் திருவீதி விழா நடைபெற்றது காலை 10 மணியளவில் தொட்டம்பாளையம் பவானி ஆற்றுப் பாலத்தில் நடுவில் சப்பரம் எடுத்து வரப்பட்டது அப்போது சப்பரம் முன்புறம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரையில் படுத்துக்கொண்டனர்

பின்னர் அம்மன் சப்பரம் பக்தர்களை கடந்து சென்றது நடுப்பாலத்தில் வெள்ளியம்பாளையம் புதூர் பக்தர்கள் பண்ணாரி மாரியம்மன் க்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர் இதையடுத்து சப்பரத்தினை தொட்டம்பாளையம் பக்தர்களிடமிருந்து வெள்ளியம்பாளையம் புதூர் பக்தர்கள் பெற்றுக் கொண்டனர் இக்கரைத்தத்தப்பள்ளி பகுதியில் திருவீதி உலா முடிந்து அம்மன் சப்பரம் அருகே உள்ள பவானி ஆற்றைப் பரிசல் மூலம் கடந்தது அரை மணி நேர பரிசல் பயணத்திற்கு பின் அக்கரைதத்தப் பள்ளி சென்று அடைந்தது

16ஆம் தேதி காலை முதல் உத்தண்டியூர், அய்யன் சாலை, ராமாவரம் வழியாக பவானி ஆற்று ஆற்றின் கரைப்பகுதியை அம்மன் சப்பரம் சென்றடைகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *