மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் எழுதுக புத்தகம் எழுதும் இயக்கத்தின் சார்பில் நேரடிப் பயிலரங்கம் நடந்தது.
கிள்ளிவளவன் பயிற்சி அளித்தார்.தேசியவலிமை வே.சுவாமிநாதன், யோகா ஆசிரியர் அர்ஜுன் சிங்,கவிஞர் இரா.இரவி,அன்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கவிஞர் இலட்சியம் சிதம்பரம் எழுதுக இயக்கத்தை வாழ்த்தி தன்னம்பிக்கை பாடல் பாடினார்.
ஆசிரியர் மணி நன்றி கூறினார்.கிள்ளிவளவன் சிறுகதை சொல்லி அதற்கான முடிவை தீர்வை மாணவர்களை 5 நிமிடங்களில் எழுதிவாங்கி சிறப்பாக எழுதிய இரு மாணவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி புத்தகப்பரிசு வழங்கிப் பாராட்டினார்கள்.
முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் பயிற்சி வீடியோ ஒளிபரப்பானது.பயனுள்ள நிகழ்வு என மாணவர்கள் பாராட்டினார்கள்.