வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழாவை ஒட்டி இரண்டாவது காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடம் தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த எட்டாம் தேதி பூச் சொறிதல் விழா உடன் திருவிழா தொடங்கியது. கடந்த பத்தாம் தேதி முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கடந்த 17 ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, அன்று அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா காட்சியும், பதினெட்டாம் தேதி அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா கட்சியும் நடைபெற்றது.
19ஆம் தேதி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், இருபதாம் தேதி சிம்ம வாகனத்திலும், 21 ஆம் தேதி அம்மன் ரிஷப வாகனத்திலும், 22 ஆம் தேதி அம்மன் யானை வாகனத்திலும், 23ஆம் தேதி அம்மன் குதிரை வாகனத்திலும் வீதி உலா காட்சி நடைபெறுகிறது.
17ஆம் தேதி முதல் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறுகிறது. வருகின்ற 24 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தற்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் வரதராஜன் பேட்டை தெரு வாசிகள் நல சங்கத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.