மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் சக்கிமங்கலம் பகுதியில் 750-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள், பூம்பூம் மாடு வளர்க்கும் 48 குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 98 பேருக்கு வாக்குரிமை உள்ளது. “எந்தவொரு வாக்காளரும் விடுபடக் கூடாது” என்ற நோக்கில் அனைத்துத்தரப்பு மக்களையும் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பங்களிப்பு செய்திட மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை சக்கிமங்கலம் பகுதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமையில் நரிக்குறவர் இன மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். எங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல என பெருமையுடன் நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்தனர்.இதேபோல,மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *