சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
குள்ளம்பட்டி கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு விழா – 100% வாக்குப்பதிவு குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தய மாவட்ட ஆட்சியர் சரயு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், கிராமங்களில் அனைவரும் வருகின்ற 19ம் தேதி வாக்கு மைத்திற்கு சென்று வாக்களிக்க வேண்டும். கிராமங்களில் 100 சதவீத ஓட்டு முக்கியமானது.
வாக்களிக்க ஏதுவாக வாக்கு மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் பயமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினார். முன்னதாக தேர்தல் விழிப்புணர்வு குறித்து வண்ண வண்ண கோலங்கள் போடப்பட்டதை பார்வையிட்டு, சிறந்த கோலத்திற்கு பரிசளித்தார்.
பின்னர் வாகனங்களில் 100 சதவீத வாக்கு குறித்து ஸ்டிக்கர் ஓட்டி வாகன பேரணியை துவக்கி வைத்தார். விழாவில் ஓயிலாட்டம், கும்மியாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்ட நிகழ்வுகளை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.