மதுரை
சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள வள்ளலார் அன்னதான கூடத்தில் நடந்த மாபெரும் அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக சேவகர் பாரதி சிவா,மதுரை தெற்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் ஜெய்கணேஷ், இரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
மேலும் ஏழை,எளியோருக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்று பிறந்த 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் இரத்தினவேலு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர் அலெக்ஸ் தலைமை வகித்தார்.
இதில் மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மதுரை கனகு, சமூகசேவகர் ஸ்ரீமான் சரவணன்,ஜெயபால், ஒளிப்பதிவாளர் பாண்டி, இணை இயக்குனர் வைரம் மூத்த நடிகர் அழகப்பன்,உதவி இயக்குனர்கள் பிரபு, சாமி, துணை நடிகைகள் சியாமளா கௌரி, முனீஸ்வரி, பத்ரகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.