கொடைக்கானல் பகுதியில் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு வழிபாட்டு தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கும் நோன்பு நோற்று பல்வேறு பகுதிகளில் கொண்டபடுகின்ற நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நகர் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் மூஞ்சிக்கல் மஸ்ஜிதே இலாஹி ,அண்ணா நகர்
மஸ்ஜிதே இக்லாஸ் ,நாயூடு புரம்,அப்சர்வேட்டரி பள்ளிவாசல் மற்றும் கொடைக்கானல் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள ஜமாத் தார்கள் ஒன்றினைந்து ஈத்கா மைதானத்தில் கடைமையான சிறப்பு தொழுகை நடத்தினர்
தொழுகை முடிந்ததும் உலகத்தில் அமைதி நிலவவும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சகோதரத்துவம் நிகழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் பேஷ்இமாம்ங்கள் கூட்டு துவா செய்தனர்.தொழுகை முடிவில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் ஸலாம் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.