திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் வேறு எங்கும் நடைபெறாத வகையில் பாடைக்காவடி திருவிழா மூலம் புகழ்பெற்ற இவ்வாலயத்தில், நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அம்மனுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை நேற்று என்பதாலும், தமிழ் வருடப்பிறப்பு முதல் நாள் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மாலை ஆறு மணி அளவில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா காட்சியை நடைபெற்றது. வருடம் தோறும் வருடப்பிறப்பு அன்று பாடகச்சேரி கிராமவாசிகளின் மண்டகப்படியாகும்.

அதேபோன்று இவ்வாண்டும் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படிகாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *