கிளிக்கொடி ஊராட்சியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு ; பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு.
கிளிக்கொடி ஊராட்சியில் அதிமுக கூட்டணி கட்சிக்காக வாக்கு சேகரிக்க வந்த அதிமுகவி னருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கிளிக் கொடி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சம்பந்தம் நகர், பரணம் மேடு, கிளிக்கொடி, கிளிக்கொடி காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் திருவள்ளூர் நாடாளுமன்ற த் தனி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான கு. நல்ல தம்பிக்கு ஆதரவாக முரசு சின்னத்தில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
அப்பொழுது கிராமத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித் தனர். இந்த வாக்கு சேகரிப்பில் அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீஞ்சூர் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தொகுதி மண்டல பொறுப்பாளருமான என். ஆறுமுகம், மீஞ்சூர் ஒன்றிய அம் மா பேரவையின் செயலாளர் பார் த்திபன், மற்றும் அதிமுக நிர்வாகி கள் ரமேஷ், முத்து, பாண்டியன், ராஜசேகர், லோகநாதன், சம்பந் தன், முனிராஜ், முனுசாமி, பரணம் பேடு பகுதியை சேர்ந்த சரவணன், ரகு, செந்தில்குமார், ஏழுமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர் இந்த வாக்கு சேகரிப்பு பணி யானது கிளிக்கோடி ஊராட்சிக்கு ட்பட்ட கிராம மக்களிடம், மற்றும் வியாபாரிகள், வயல்வெளியில் பணிபுரியும், பெண்களிடம் உள்ளி ட்ட பல்வேறு இடங்களில் வாக்கு களை சேகரித்தனர்.
அப்பொழுது அதிமுக கூட்டணி கட்சியான முரசு சின்னத்திற்கு வாக்களிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.