செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த பரமேஸ்வரன்( வயது 48) என்பவர் கஞ்சா வழக்கில் கடந்த ஆண்டு மதுரை அடுத்த திருப்பாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்து வந்தார் .

அவரது தந்தை ஆறுமுகம் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது ஈமகாரியம் மார்ச் 30 ஆம் தேதி செங்குன்றத்தில் நடைபெற்றது இதற்கு நீதிபதியிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்ததில் அவருக்கு இரண்டு நாள் பரோல் கிடைத்தது.

பரமேஸ்வரன் மதுரை சிறையில் இருந்து ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 6 போலீசார் பாதுகாப்புடன் செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.

வீட்டிலிருந்து யாரும் பார்க்காத நேரத்தில் அங்கிருந்து உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார் இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைதி காணாமல் போனது குறித்து செங்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய பரமேஸ்வரனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பரமேஸ்வரனை கைது செய்து செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *