ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4 ரத வீதிகளில் வலம் வந்து கோவிலில் உள்ள யாகசாலை மண்டபத்தை வந்து அடைந்தனர்.
இங்கு மாப்பிள்ளை வீட்டாராக மோகன் பேண் வீட்டாராக மணிகண்டன் ஆகியோர் செயல்பட்டு ஜெனகை நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் மேளதாளத்துடன் அழைத்து வந்து யாகவேள்வி முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது.
இதைத் தொடர்ந்து சுவாமி சமேதமாக ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்று அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் வழங்கினார்கள்.
கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி திருமண நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் செயல்அலுவலர் சுதா, கோவில் பணியாளர்கள் முரளிதரன், மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.