வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி
வேதாரண்யம் வட்டம் வேதநாயகி உடனுறை வேதாரண்யஸ்வரர் ஆலயத்தில் வருடம் ஒரு முறை சித்திரை மாதம் வளர்பிறை சப்தமியில் நடைபெறும் திருமணக்கோல திருக்காட்சியானது..
இந்த தமிழ் குரோதி வருடம் சித்திரை மாதம் வளர்பிறை சப்தமியில் (15/04/2025 )இன்று நண்பகல் 12:00 மணியளவில் அகத்திய மாமுனிவருக்கு திருமண கோலத்தில் சிவனும் பார்வதி தேவியும் தம்பதி சமேதராக காட்சி கொடுத்த நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தாம்பூல பை கொடுத்தல் மற்றும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்வில் வரணி ஆதினம் செவந்திநாத பண்டார சன்னிதி மற்றும்
திருக்கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.