தஞ்சாவூா் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
கோடை வெப்பத்தில் மக்களைக் காக்க மருத்துவ முகாம்.
தஞ்சை புனித ஆரோக்கிய மாதா பல்நோக்கு மருத்துவமனை சார்பில் இந்த வருட கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து மக்களை காக்க இலவச மருத்துவ முகாமை, திரு இருதய ஆண்டவர் மறை மாவட்ட பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டுக்கு பின் நடத்தப்பட்டது.
இந்த மருத்து முகாமில் பேராலயம் பங்கு தந்தையும் மறை மாவட்ட அதிபருமான பிரபாகர் தொடங்கி வைத்தார். உதவி பங்குத்தந்தை பிரவீன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமில் புனித ஆரோக்கிய மாதா பல்நோக்கு மருத்துவமனை சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் மரு. ராகேஷ், பொதுநல மருத்துவர் சங்கமித்ரா, அறுவை சிகிச்சை மருத்துவர் மேரி பிரிசில்லா மற்றும் மருத்துவ செவிலியர்கள், இரத்த பகுப்பாய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் வந்த பொது மக்களுக்கு அவர்களின் உடல் சார்ந்த நோயின் தன்மை பொறுத்து இரத்த அழுத்தம் அளவு, சர்க்கரை அளவு, இ.சி.ஜி, சிறுநீரக ஆய்வு உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனை. மேலும் அங்கு சிகிச்சை வந்த நோயாளிக்கு உள்ள காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி, வயிற்றுப்புண், ஆஸ்துமா, சளி இருமல், குடலிறக்கம், மார்பகம் மற்றும் இதர கட்டிகளுக்கு தீர்வு காணும் வகையில் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் தேவைப்படுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த இலவச மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய மாதா பல்நோக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் எலிசபெத் ஜான், நிர்வாகி ராஜம் பி.ஆர்.ஓ ஜெனித் மற்றும் பேராலய பங்கு நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த பகுதியை சார்ந்த ஏராளமான பொதுமக்களும், நோயாளிகளும் இந்த மருத்துவ முகாமில் பங்கு பெற்று பயனடைந்தார்கள்.