உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாகரல் ஏ.வி.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

இதில், அந்தக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே. தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி, வேட்டி,சேலை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை பழங்குடியின மற்றும் இருளர் மக்களுக்கு வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இது போன்று, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அந்த கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், சுகன், கே.சதீஷ், பி. வினோத், உதயன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *