மதுரை சித்திரை திருவிழாவினை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் தண்ணீர் வருவதை வரவேற்று வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மலர் தூவி வரவேற்றனர்.
தற்போது திறந்து விடப்படும் தண்ணீர் வைகை ஆற்றுப் படுக்கையில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படுகிறது.
மதுரை , தேனி ஆண்டிபட்டி, சேடப்பட்டி,குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம் போல திறந்து விடப்படுகிறது.. மதுரையில் இதை வரவேற்று வைகை எம்.ராஜன் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் துரை விஜய பாண்டியன், கண்ணன் ,
ஆழ்வார் புரம், செந்தில்குமார் பழனிவேல் ராஜன், செந்தில்குமார்,பார்த்தசாரதி, மணிகண்டன் ஆர்.பி.பாலன் இல. அமுதன், திருநாவுக்கரசு முனிச்சாலை.சசிகுமார் , ராஜவேல்,சரவனனன் ,உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்து வைகை நதியில் மலர் தூவி வரவேற்றனர்.