செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உடல் நலமும் ஊட்டச்சத்து பொருட்களும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் சதானந்தன், கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் மனோஜ் குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, டாக்டர் காளிச்செல்வம் பங்கேற்று, கோடை காலத்தின் குழந்தைகளுக்கான உணவு வகைகள் பற்றியும், நீர் அதிகம் பருக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இறுதியில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.