செங்கல்பட்டு அடுத்த பாலூரில் சாலையில் நின்றிருந்த மினி சரக்கு லாரியில் இருந்து பேட்டரி திருடிய மூவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல்நிலையத்
திற்கு உட்பட்ட பாலூர், ஆப்பூர்,ரெட்டிப்பாளையம்,
உள்பட சாலைகளில்நிறுத்தியிருக்கும் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை குறிவைத்து பேட்டரிகள் திருடுபோவதாக பாலூர் காவல்
நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள்
வந்தன. அதனை தடுத்து நிறுத்தி பேட்டரி திருடும் மர்மநபர்களை பிடிப்பதற்காக காவல் ஆய்வாளர் புகழ் தலைமையில் உதவி ஆய்வாளர் ஶ்ரீதர் மேற்பார்வையில் பாலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவுபகல் என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாலூர் ரெட்டிப்பாளையம்
சாலையில் நின்றிருந்த டாடா ஏசி சரக்கு வானத்தின் அருகே இரவுநேரத்தில் சம்மந்தமில்லாமல் சந்தேகப்படும்படியான வகையில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்டதில் பேட்டரி பாதி கழட்டிய நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.

அவர்களை பாலூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள்
அமல்ராஜ் என்பவரது மகன் விக்னேஷ் (33) அமலநாதன் மகன் கோமேஷ் (22) மற்றும் கிஷோர்குமார் மகன் வினித்குமார் (25) என்பதும் அந்த டாடா ஏசி வாகனத்தில் பேட்டரி திருட முயற்சித்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *