ராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் அருகில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நேதாஜி வயது24. த/பெ முருகன் சின்னத் தெரு சென்ன சமுத்திரம் கிராமம்என்பவரைவிசாரித்தபோது அந்த நபர் தான் செய்த செல்போன் திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அந்த நபர் வாலாஜாபேட்டை அஞ்சலகம் அருகில் வைத்து 26.04.2024 இரவு 08.00 மணிக்கு கார்த்திகேயன் வயது49 த/பெ ஏகாம்பரம் ரபீக் நகர் வாலாஜாபேட்டை மற்றும் 27.04.2024 ம் தேதி காலை 8.00 மணிக்கு படவேட்டம்மன் கோயில்வைத்து கார்த்திகேயன் வயது 58 த/பெ சுந்தரம் ரபிக் நகர் வாலாஜாபேட்டை ஆகிய இரண்டு நபர்களிடமிருந்து செல்போன்களை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

பின்னர் திருடிய செல்போனை எதிரி நேதாஜிடமிருந்து இருந்து சுமார் 20000/- மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகன ஒன்று ஆகியவற்றை கைப்பற்றி மேற்படி நேதாஜி என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

மேலும் இந்த செல்போன் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *