எப்போதும் வெற்றியை பற்றிய சிந்தனை மட்டுமே வெற்றியை கொடுக்கும் என நீட் தேர்வு பயற்சி வகுப்பு நிறைவு விழாவில் கலந்து கொண்ட முகம்மது ரபி மாணவ,மாணவிகளிடையே பேசினார்..

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள புத்தா ஐ.ஏ.எஸ்.அகாடமி மற்றும் எல்.சி..குருசாமி கல்வி மையம் ஆகியோர் இணைந்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத்தேர்வு நீட் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகின்றனர்..

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் 27 மாணவ,மாணவிகள் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்துள்ளனர். இதற்கான நிறைவு விழா காந்திபுரம் புத்தா ஐ.ஏ.எஸ்.அகாடமி அரங்கில் நடைபெற்றது… நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,மாணவ,மாணவிகள் தாங்கள் வெற்றி பெற்று வாழ்வில் ஒரு நிலையை அடையும் போது, மற்றவர்களுக்கு ஒரு ஏணியாக இருந்து கீழே இருப்பவர்களை உயர்த்த வேண்டும் என்றார்.

எப்போதும் வெற்றியை பற்றிய சிந்தனை மட்டுமே வெற்றியை கொடுக்கும் என தெரிவித்தார்.. இந்நிகழ்ச்சியில்,அகாடமியில் இலவச பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் ஆசிரியர்கள் அய்யனார்,சுதா,மூர்த்தி,தமிழரசு,ஆகியோர் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முன்னதாக ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள் தேர்வுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்,மற்றும் தேர்வு தயார் செய்யும் முறைகள் குறித்து எடுத்து கூறினர்.. விழாவில் மத்திய மாநில எஸ்.சி.எஸ்.டி.அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மணிமாறன், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள்ரங்கநாதன்,சந்திரசேகர்,வினோத்,சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *