கோடை வந்தாச்சு குலு குலு தென்னந்தட்டி
கூரையுடன் காரில் உலா வரும் நம்ம ஊரு தாத்தா

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி அரண்மனை தெருவில் வசிப்பவர் பிரம்மநாயகம் தாத்தா (வயது 78) இவர் நெடுஞ்சாலை துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு‌ பெற்றவர்.

இவர் ஓவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கியதும் தனக்கு சொந்தமான காரின் மேல் கூரையின் மீது தென்னம் தட்டி வைத்து கோடை வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க இயற்கை முறையில் நிழல் அமைத்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் சாலையில் உலா வருகிறார்.

இது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் தன்னை பொறுத்தவரை இயற்கை முறையில் குளிர்ச்சி தருகிறது கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இயற்கை முறையில் குலு குலு என இருக்கிறது என கூறுகிறார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *