தூத்துக்குடி மாநகர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் முழு அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளது
பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் கண்டு கொள்வதே கிடையாது இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்
குறிப்பாக வி.இ.ரோடு. ஜெயராஜ் ரோடு பால விநாயகர் கோவில் தெரு அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் ஆக்கிரமித்து ஹோட்டல்கள் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது
அது போல அண்ணா பேருந்து நிலையம் முழுவதும் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது இந்த நிலையில் பாளை ரோட்டில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது இங்கு இருவருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறது இந்தக் குழந்தையை மையம் முன்பு ஆவின் பாலகம் என்ற பெயரில் பழ கடை இயங்கி வருகிறது
இந்த பழக்கடை குழந்தைகள் மையம் செல்லும் பாதையை ஆக்கிரமித்து ரோட்டில் கடை வைத்துள்ளது பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இந்த நிலையில் அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் குழந்தைகள் மையம் செல்லும் நடைபாதையில் போதையில் படுத்து உள்ளார்
ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சம் என்று தூத்துக்குடி மாநகரில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது