இராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிச்சாமியாபுரம் பகுதியில் வசிப்பவர் ராமசாமிமனைவி கடற்கரையம்மாள்(56) இவர் தனது கணவனை பிரிந்து தனது மகன் சரவணன்(35) யுடன் வசித்து வருகிறார் சரவணன் பிஏ
வரை படித்துவிட்டு அருகில் உள்ள ஒரு மது பாரில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் மைனர் என்பவரின் மனைவி மாலதி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது நாளடைவில் இந்த விசயம் மைனருக்கு தெரியவரவே பல முறை கண்டித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் தொடர்ந்து சரவணன் மாலதி இருவரும் பேசிவந்துள்ளனர்

இந்நிலையில் நேற்று சரவணனுக்கு போன் வந்துள்ளது பேசிவிட்டு தனது அம்மாவிடம் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்

இதில் தாய் கடற்கரையம்மாள் சற்று இடைவெளிவிட்டு மகனை பின்தொடர்ந்து சென்றுள்ளார் அப்போது நகராட்சி கழிப்பிடம் அருகே நின்றிருந்த மைனர் மற்றும் பால்ராஜ் அழகர்சாமி என்ற சூப் ஆகிய மூவரும் சரவணனை வழி மறித்து ஏன்டா எத்தனை சொன்னாலும் என் மனைவியுடன் பேசாமல் இருக்க மாட்டாயா என்று ஆவேசமாக கூறியபடி மற்ற இருவரும் பிடித்துக்கொள்ள தயாராக வைத்திருந்த அரிவாளால் மைனர் வெட்டியுள்ளார்

இதை பின் தொடர்ந்து வந்த சரவணனின் அம்மா கூச்சல் போட மூவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர் இதையடுத்து அங்கு வந்த சிலரின் உதவியுடன் சரவணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சரவணனை பரிசோசித்த மருத்துவர்கள் ஏற்க்கனவே இறந்துவிட்டதாக கூறியதையடுத்து தகவலின்பேரில் விரைந்து வந்த இராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடித்தது பகுதிமக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *