ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாஜக பிரதமர் மோடியின் வரம்பற்ற வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் அறிவுறுத்தலின் படி,ராஜஸ்தானில் 21/04/2024-ல் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாஜகவின் பிரதமர் மோடி,காங்கிரஸ் கட்சி பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும்,பெண்களின் தாலி கொடியைப் பற்றியும் இழிவாக தொடர்ந்து எல்லா பரப்புரைகளிலும் பேசி கொண்டு உள்ளார், அதனை கண்டித்து வருகின்ற 30.04. 2024 அன்று மாலை சரியாக 5 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சந்திப்பில் ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம். தீபா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருச்செல்வம் துவக்கி வைத்து கண்டன உரையாற்ற உள்ளார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், துணை அமைப்பு தலைவர்கள், மண்டல தலைவர்கள், வார்டு தலைவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம்.எம் தீபா தலைவி
ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ்.