அலங்காநல்லூர்.ஏப்.29-
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி வாட்டி வதைக்கிறது
இந்த நிலையில் அதிமுக நகர் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து ஒரு வாரமாக நீர் மோர் நகர் கழக செயலாளர் அழகுராஜ் தலைமையில் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை என்பதால் மதியம் வணிகர்களும் காய்கறி வாங்க வந்த பொதுமக்களும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிமுக நீர் மோர் பந்தலுக்கு வருகை தந்து நீர்மோர் சர்பத் இளநீர், உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்தினர் காலை 11 மணிக்கு நீர்மோர் நிர்வாகிகள் வழங்கினர்
அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணி வரை வழங்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை காலை 11:00 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2.00 மணி வரை நீர்மோர் மற்றும் தண்ணீர் பழம், ரஸ்னா, சர்பத், கொய்யாப்பழம், திராட்சை, நுங்கு, இளநீர், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இதில் அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளரும் பேரூராட்சி கவுன்சிலருமான நாட்டாமை சுந்தர்ராஜன், நகர பொருளாளர் சுந்தரராகவன்,
இணை செயலாளர் புலியம்மாள், வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன், வலசை கார்த்திக், கணேசன், பாண்டியன், பிரதிநிதிகள் கேட்டுகடைமுரளி, பாண்டிச்செல்வி, இலக்கிய அணி ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.