போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குட்டை ஏரி அருகாமையில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சகாதேவன் த/பெ கோபால் என்பவருக்கு சொந்தமான தோப்பில் குடிசை அமைத்துள்ளார் இந்த குடிசையை இன்று இரவு மர்ம நபர்களால் தீவைத்து சென்றுள்ளனர்

குடிசையில் உள்ள உரம் மூட்டைகள் கட்டில் தேங்காய் மற்றும் விவசாய தளவாட பொருட்கள் மற்றும் தென்னம் செடி வாழை மரங்கள் எரிந்து சாம்பல் ஆயினர் இதுபோல் இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று முறை தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது முன்னாள் ராணுவ வீரர் சகாதேவன் கூறும் போது நான் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் எங்களுக்கே இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது என்றால் ஒரு சாமானிய பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று இதுபோல சம்பவங்கள் நடைபெறுவதால் அதிர்ச்சி ஏற்படுத்தியது எனவே இந்த வழியாக செல்லக்கூடிய மர்ம நபர்களை உரிய விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *