கடையத்தில் கலைஞர் நீர் மோர் பந்தல் திறப்பு விழா–சுரண்டை ஜெயபாலன் திறந்து வைத்தார்
தென்காசி தெற்கு மாவட்டம்
கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் நீர் மோர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவி;ன் பேரில், கோடை வெயிலின் தாக்கத்தையொட்டி கடையம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், குளிர்பானங்களை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கடையும் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ்மாயவன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், அவைத்தலைவாபக்கீர் மைதீன், துணை செயலாளர் வின்சென்ட், மாவட்ட பிரதிநிதி பெருமாள், சிறுபான்மை பிரிவு புகாரி மீரா சாஹிப், விவசாய அணி எல்என்டி முருகன், மாவட்ட கவுன்சிலர் கோதர் மைதீன் ,கிளை செயலாளர்கள் காந்தி, அழகிய நம்பி, ரஜினி முருகன், அர்ஜுனன், அழகை மாரியப்பன், ஜெபஸ்தி ராஜன், வின்சென்ட் பால், அந்தோணி சாமி, நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோபி (எ) கோபால கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.