ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாசிச பாஜக பிரதமர் மோடியின் வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து தாலிக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் அவர்களின் அறிவுறுத்தலின் படி,ராஜஸ்தானில் 21/04/2024-ல் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாசிச பாஜகவின் பிரதமர் மோடி,காங்கிரஸ் கட்சி பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும்,பெண்களின் தாலி கொடியைப் பற்றியும் இழிவாக தொடர்ந்து எல்லா பரப்புரைகளிலும் பேசி கொண்டு உள்ளார் இதனை கண்டித்து இன்று 30/04/2024 மாலை 5 :30 மணிக்கு ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சந்திப்பில் ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி எம். தீபா தலைமையில் தாலிக்கொடி ஏந்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டி.திருச்செல்வம் இந்த கண்டன ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.!!
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பா ராஜேஷ் ராஜப்பா, ஜே பி கோதண்டபாணி, அம்மன் மாதேஷ், பாபு என்கிற வெங்கடாஜலம், பாஸ்கர் ராஜ் மண்டல தலைவர்களான ஆர். விஜயபாஸ்கர் ,எச் எம் ஜாபர் சாதிக், மாவட்ட பொது செயலாளர் இரா கனகராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் (டி சி டி யு)மாநிலத் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது,துணைத் தலைவர் கே என் பாஷா,நெசவாளர் அணி மாவட்டத் தலைவர் சி மாரிமுத்து, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, ஓ பி சி பிரிவு மாவட்ட தலைவர் சூரியா சித்திக், முன்னாள் வட்டார தலைவர் நசியனூர் நடராஜ், என் சி சுப்பிரமணியம், மாது, மாவட்ட நிர்வாகிகளான கே ஜே டிட்டோ, ராஜாஜிபுரம் குமரேசன், சூரம்பட்டி வார்டு தலைவர் விஜயகுமார், கனி ராவுத்தர் குளம் சபீர் அகமது ,மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளான சரோஜினி, அம்சவேணி, பிரபா ஹரி, தேன்மொழி, ஜெனிபர்,கோமதி, சோபியா மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு பாசிச பாஜக மோடியின் வெறுப்புணர்வு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள்