பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
வலங்கைமான் அருகே ஏரியில் 12 மணி நேரம் கூடுதலாக மும்முனை மின்சாரம் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்…..
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மும்முனை மின்சாரம் கூடுதலாக 12 மணி நேரம் வழங்க வேண்டும் எனவும், ஏரி கிராம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ,
பாசன நீர் இல்லாமல் கோடை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும் உடனடியாக தமிழக அரசு தாங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கிராம மக்கள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கையில் குடத்துடன் திருக்கருக்காவூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.