ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டாரங்கில் இரண்டு அலுவலருக்கு
பணி நிறைவு விழா;-

மே;-01

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர்
பாலகிருஷ்ணன்,சமூக நலத்துறையில் ஊர் நல அலுவலர் ஜெபக்கனி விஜிலா ஆகியோர் 38 வருட காலமாக உள்ளாட்சி துறையில் பணிபுரிந்தனர்.
இவர்கள் இருவரின் பணி நிறைவு விழா ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைப்பெற்றது .

ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
கணேசன், மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) சீதா லெட்சுமி முன்னிலை வகித்தார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் கிடாரக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ஆண்டி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா,வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி,சமூக நல விரிவாக்க அலுவலர் (மகளிர்)பாத்திமா பீவி ஊராட்சி ஒன்றிய
உதவியாளர்வெள்ளத்துரை,பணி மேற்பார்வை யாளர் செந்தில் பாலமுருகன்,ருகன்,பணிஒருங்கிணைப்பாளர் நாகராஜன்,கணினி அலுவலர் நமச்சிவாயம் ,
ஊராட்சி செயலாளர்கள் முருகேசன், வைத்திலிங்கம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த விழாவில் சமுக நல துறை பணியாளர்கள் ,
ஊராட்சி செயலர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள், மற்றும் உறவினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *